நரசிம்மரின் மகா மந்திரத்தை பிரம்ம முகூர்த்த வேளையில் 108முறை உச்சரிக்கும் பட்சத்தில் வாழ்க்கையில் நீங்கா துன்பங்களும் நீங்கும் என்பது தான் நம்பிக்கை.
நரசிம்மரின் மகா மந்திரத்தை பிரம்ம முகூர்த்த வேளையில் 108முறை உச்சரிக்கும் பட்சத்தில் வாழ்க்கையில் நீங்கா துன்பங்களும் நீங்கும் என்பது தான் நம்பிக்கை.
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம் ந்ருஸிம்ஹம்
பீஷணம் தம் பத்ரம் ம்ருத்யும்
ம்ருத்யும் நமாம்யஹம்
கோபம், வீரம், தேஜஸ், (பிரகாசம்) கொண்ட மகாவிஷ்ணுவின் அவதாரமான நரசிம்மரே! எல்லா திசைகளையும் பார்த்து கொண்டிருக்கும் உன்னிடமிருந்து தவறு செய்பவர்கள் யாராலும் தப்பிக்க முடியாது.
எதிரிகளுக்கு பயத்தையும், மரணத்திற்கே மரணத்தையும் காட்டி எல்லாமும் நீயாக இருக்கின்றாய். உன்னை மனமார வணங்குகின்றேன். என்றவாறு சொல்லி காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் நரசிம்மரை மனதார நினைத்து வழிபடுங்கள்.